Friday 4 December 2020

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் பேரா மந்திரி பெசார்

ஈப்போ-

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸூமு மீது கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அப்பதவியிலிருந்து அவர் விலகவுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் டத்தோஶ்ரீ பைசால் அஸுமுவுக்கு எதிராக 48 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் கிடைத்தன. ஒருவர் வாக்களிக்கவில்லை.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துள்ள டத்தோஶ்ரீ பைசால் அஸுமு பேரா சுல்தானை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவை முன்வைக்கவுள்ளார்.

நாட்டின் நடப்பு சூழலில் சட்டமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு வழிவிடுவதை காட்டிலும் சுமூகமான முறையில் அதிகார மாற்றம் நிகழலாம் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, பேரா மாநிலத்தில் புதிய மந்திரி பெசாராக மாநில அம்னோ தலைவர் டத்தோ சராணி பதவியேற்பதற்கு ஏதுவாக பேரா சுல்தானை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment