Monday 21 September 2020

மக்கள் நல உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

கோத்தா கெமுனிங்-

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேன்டும் எனும் நோக்கில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் மக்கள் நல உதவித் திட்டங்கள் விளக்கமளிப்பும் பதிவு நடவடிக்கையும் நடைபெற்றது.

நேற்று இங்குள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு சார்புடைய பல்வேறு இலாகாக்களின் அதிகாரிகள் நேரடியாக வந்து மக்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வு குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு உதவித் திட்டங்களை  அமல்படுத்தியுள்ள போதிலும் இன்னும் பெரும்பாலானோர் அந்த உதவித் திட்டங்களை அறியாமலே உள்ளனர்.

குறிப்பாக பி40 வர்க்கத்தினருக்கு இந்த உதவித் திட்டங்கள் அவசியமானது என்ற போதிலும் வேலை பளு காரணமாக பலர் இத்தகைய உதவித் திட்டங்களை நழுவ விடுகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் விளக்கமளிப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உதவித் திட்டங்கள் குறித்த  விளக்கம் பெற்றதோடு தகுதியானவர்கள் அந்த உதவித் திட்டங்களில் பதிவு செய்து கொண்டனர் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஒரு சாரார் மட்டும் கலந்து கொள்ளாமல் மூவின மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்று அவர் சொன்னார்.

ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP) , சமூக நல உதவி இலாகா (JKM), இ-காசே (E kasih) போன்ற மத்திய அரசின் உதவிகளும் சிலாங்கூர் மாநில குடிமக்கள் அறவாரியம் (YAWAS), சிறு வியாபாரிகளுக்கான புளூபிரிண்ட் திட்டம் (Blueprint), பரிவு மனை திட்டம் (Rumah Prihatin), மைசெல் (mySel),  முதியோர் பிறந்தநாள் பற்றுச்சீட்டு திட்டம் )SMUE), பெருநாள் கால பற்றுச்சீட்டு பதிவு திட்டம் (JSP)  உட்பட பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.

இதர படங்கள்:












No comments:

Post a Comment