Sunday 27 September 2020

இந்தியர்களுக்கான மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை கேபிஜே முன்னெடுக்கும்- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர்கள் சொந்த வீடுகளை கொண்டிருக்கும் வகையில் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சு வகுத்துள்ள வீட்டுடமை திட்டங்களில் பங்கு பெறுவதற்கு தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பரிந்துரை செய்யும் என்று அக்கழகத்தின் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

1977ஆம் ஆண்டு துன் ச.சாமிவேலு தலைமைத்துவத்தின் தோற்றுவிக்கப்பட்ட கேபிஜே எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பல வீட்டுடைமை திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சொந்த வீடுகளை பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை இக்கூட்டுறவுக் கழகம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, சுங்கை சிப்புட்டில் உள்ள தாமான் துன் சம்பந்தன், சிரம்பானில் தாமான் திவி ஜெயா, காஜாங்கில் தாமான் புக்கிட் முத்தியாரா, பகாங், ரவூப்பிலும் , பாடாங் செராயிலும், தெலுக் இந்தான், பத்து 6 பகுதியிலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஜொகூர், ஸ்கூடாயிலும், சுங்கை சிப்புட்டில் கிந்தா செளஜானா வீடமைப்புத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைந்துள்ள இதுபோன்ற வீடமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள இக்கூட்டுறவுக் கழகம் மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுக்கும் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சின் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையிலும் களமிறங்கவுள்ளது.

மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அது சொந்த வீடுகளை கொண்டிராத இந்தியர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்று இன்று கேபிஜே கூட்டுறவுக் கழகத்தி  விஸ்மா துன் ச.சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், கேபிஜே கூட்டுறவு கழகத்தின் செயலாளர் டத்தோ கோபாலகிருஷ்ணன் உட்பட அதன் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment