Sunday 30 July 2017

சுங்கை சிப்புட்டை மீட்டெடுக்க தேசிய, மாநில மஇகாவுக்கு எண்ணமில்லையா?


சுங்கை சிப்புட்-
கடந்த இரு தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகின்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு தேசிய, மாநில மஇகா தலைமைத்துவத்திற்கு துளியளவும் எண்ணமில்லையா? என இத்தொகுதி கிளைத் தலைவர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அண்மையில் இங்கு நடைபெற்ற தொகுதி மஇகா கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்தனர்.

2008, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் இங்கு களமிறங்கிய மஇகா  வேட்பாளர்கள் எதிர்க்கட்சியினரிடம் தோல்வியை சந்தித்தனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வெகு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இத்தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுப்பதற்கு ஏதுவாக தேசிய, மாநில மஇகா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கிளைத் தலைவரான அப்துல் ஜபார் வினவினார்.

வெற்றி பெறுவதற்கான பிரகாச சூழல் இத்தொகுதியில் தென்படும் வேளையில் தேசிய, மாநில மஇகா துளியளவும் இங்கு அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது.

'எடுப்பார் கைப்பிள்ளை' தொகுதி போல வருபவரெல்லாம் வேட்பாளர் என்ற துர்பாக்கிய நிலையே காணப்படுவதால் ஆக்ககரமான திட்டங்கள், நடவடிக்கைகளின் வழி இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள தேசிய, மாநில மஇகா தலைமைத்துவம் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதோடு, கடந்த காலங்களில் மக்களுக்கு முன்னெடுக்கப்படாத திட்டங்களினாலே இங்கு  களமிறங்கிய மஇகா வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்த வேளையில் இனி வரும்  காலங்களில் வாக்காளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என கிளைத் தலைவர்களில் ஒருவரான லோகநாதன் கேள்வி எழுப்பினார்.

இதுவரையிலும் தேசிய முன்னணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டு உழைத்த மஇகாவினர் கூட எத்தகைய சலுகைகளையும் வாய்ப்புகளை அனுபவிக்காத நிலையில் இங்குள்ள வாக்காளர்களின் நிலையை உணர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment