Sunday 23 July 2017

மருந்தில்லாமல் ஆரோக்கியமான வழிமுறையில் அதிகமான நோய்களுக்கு தீர்வு காண முடியும் - டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி


கடந்த காலங்களை விட சமீபக் காலமாக அதிகமானோர் மருந்துகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அடிமையாகியுள்ளனர். இதற்கு முதல் காரணம் அவர்களது உணவுக் கட்டுபாடும் உடற்பயிற்சியின்மையும் ஒரு காரணமாகும். அதிகமான மருந்து உட்கொள்வதால் பிற்காலத்தில் நாம் மேலும் பல நோய்களுக்கு ஆளாகுகிறோம் என்பது அனைவரும் அறியாத ஒன்று.

இதனை நிவர்த்திச் செய்யும் வகையில் டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி புது யுக்தியைக் கையாண்டு மருந்தில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் இயற்கை அழகு பாரமரிப்புக்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் சிறப்பான முறையில் இங்கு செராஸ் பத்து செம்பிலானிலுள்ள ஜாலான் தெங்ஙா செராஸ் செலாத்தான் 118இல் உள்ள தனது சிகிச்சை மையத்தை வழிநடத்தி வருகின்றார்.

டத்தின் டாக்டர் எஸ். இராஜேஸ்வரி பற்றிக் கூறுகையில், இவர் மலாக்கா மாநிலத்திலுள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் மலாக்கா மணிப்பால் பல்கலைகழகத்தின் மருத்துவப் பட்டதாரி ஆவார். இவர் தனது நிபுணத்துவ டாக்டர் பட்டப் படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளார். பிறகு, அழகுக்கலை தொடர்பான பட்டப்படிப்பை ஜெர்மனியில் முடித்துள்ளார். இவரின் திறமைக்காக பல நாடுகளில் நற்சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ஒவ்வொரு முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் தன் கணவர் டத்தோ டாக்டர் ரவி மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று 'பாரதம்' மின்னியல் ஊகடகத்தின் சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும், அதிகமானோர் தினசரி வேலைப்பளுக் காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை, உணவகங்களில் உண்பதாலேயே அதிகமான நோய்களுக்கு அடிமையாகின்றோம். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நடு எலும்பு வலி என நிறைய நோய்களுக்கு ஆளாகின்றோம். இந்த நோய்களை மருந்து, ஊசி, வலி இல்லாமல் நாடித் துடிப்பின் மூலம் பிராணவாயு அளவைக் கணக்கிட்டு இந்த வகை நோய்களை குணப்படுத்த முடியும்.



'வெள்ளம் வரும் முன் அணை போடு' என்ற பலமொழிக்கேற்ப நோய் வரும் முன் அதற்கான வழிமுறைகளை கையாண்டால் நோய்களை தடுக்க இயலும். தினசரி உடற்பயிற்சி என்பது நம் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக செய்தலும் நிறையான சாப்பாடு முறையை கையாளுதலும் நோய்களிருந்தும் இளமை பருவத்தை மேம்படுத்தவும் சிறப்பாக அமையும் என்று டாக்டர் எஸ். இராஜேஸ்வரி கூறினார்.

20 வயதில் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு, 30 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவியவர்களும் உண்டு. இதனைத் தடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு என டாக்டர் இராஜேஸ்வரி குறிப்பிட்டார்.

இந்த நோய்களை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்காக வெள்ளி செலவில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மருத்துவ சாதனங்களை சிகிச்சை மையத்தில் (கிளினிக்) இறக்குமதி செய்து சிறப்பான சிகிச்சைகளை வழங்கி வருகின்றார். இதன் மூலம் ஊசி பயன்படுத்தப்படாமல் வலி இல்லாமல் சிகிச்சை பெறலாம். மேலும் முக்கியமான உயிர்க் கொல்லி நோய்களை இதன் வழி குணப்படுத்த முடியும்.



இதுவரை, நடக்க முடியாதவர்களை நடக்க வைத்துள்ளனர், இருதய அடைப்புள்ளவர்களை குணப்படுத்தியுள்ளார். இதனிடையே, இவரின் சிறப்பு அம்சமாக கரு வளர்ச்சியில்லாதவர்களுக்கும் நிவாரணமளித்து அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பெண்கள் மட்டுமே அழகுக்கு முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களும் அதற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் நம் உள் உறுப்புகள், சுவாச காற்று பிரச்சினை, முகப்பரு, உடல் பருமன் குறைப்பது, முடிப் பிரச்சினை, பெண்களுக்கான மூக்கு  அழகுப்படுத்துவது, இளமையாக்குவதற்கான சிகிச்சை என குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மருந்தில்லா சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கி அவர்களின் செலவீனங்களுக்கேற்ப சிகிச்சைகள் முறையாகவும் தரமாகவும் வழங்கப்படுகிறது என டாக்டர் இராஜேஸ்வரி குறிப்பிட்டார்.

இங்கு அரச குடும்பத்தினர், நாட்டின் முக்கிய பிரபலங்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் மருந்தில்லா மருத்துவ சிகிச்சை பற்றியும் அழகு சார்ந்த விவரங்கள் அறிந்து கொள்ளவும் www.cosmed.my எனும் அகப்பக்கதிலும் அல்லது https://www.facebook.com/CosMedsWellnesscherasselatan118 எனும் முகநூல் வாயிலாகவும் வலம் வரலாம்.


No comments:

Post a Comment