Wednesday 2 June 2021

வங்கி கடன் ஒத்திவைப்பு: பி40 பிரிவினர் பயனடைவர்

கோலாலம்பூர் -

பந்துவான் பிரிஹாத்தின் ரக்யாட் எனப்படும்  பிபிஆர்  உதவி திட்டத்தில் பதிந்து கொண்டுள்ள பி40  பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினர் அனைவருக்கும் மூன்று மாத வங்கி கடன் கட்டணம் ஒத்திவைப்பு சலுகையை பெறுவர் என்று வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தை அடுத்து பிரதமர் அறிவித்த உதவி  திட்டங்களில் வங்கி கடன் செலுத்தும் காலகட்டம் மூன்று மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினரும் வேலையை தற்காலிகமாக இழந்துள்ளவர்களும் பயன் அடைவர் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment