Saturday 20 February 2021

அம்னோவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளை மஇகா கோரும்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

 லிங்கா

சுங்கை சிப்புட்-

தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக கடந்த காலங்களில் அம்னோவிடம் தாரை வார்க்கப்பட்ட தொகுதிகள் மீண்டும் கோரப்படும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த கால பொதுத் தேர்தல்களில் சில தொகுதிகளை மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. அத்தகைய தொகுதிகளை அம்னோ வெற்றி கொள்ளாத சூழலில் மஇகா அத்தொகுதிகளை மீண்டும் கோரும்.

அம்னோ வெற்றியடைந்தால் தேமு வலுபெறும் எனும் நிலையில் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்பட்டன.  

ஆனால் இனிவரும் தேர்தலில் விட்டுக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள சூழலில் அத்தொகுதிகளில் மஇகா மீண்டும் போட்டியிட தேமு உச்சமன்றக் கூட்டத்தில் பேசுவோம்.

இதன் மூலம் மஇகாவின் பிரதிநிதிகள் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெறுவது சாத்தியமாகும் என்று சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment