Wednesday 24 February 2021

கோவிட்-19 தடுப்பூசி பிரதமருக்கு செலுத்தப்பட்டது

 புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட PFIZER தடுப்பூசி மருந்து பிரதமர் முஹிடின் யாசினுக்கு இன்று செலுத்தப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்த கோவிட்-19 தடுப்பூசி முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

PFizer தடுப்பூசி மருந்தின் மீது மலேசியர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ நீர் ஹிஷாம் ஆகியோரும் இன்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

புத்ராஜெயா சுகாதார மையத்தில் இவ்விருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment