Friday 23 October 2020

அவசரகால நிலையை பிரகடனப்படுத்துகிறதா மலேசியா?

 கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அவசர கால நிலையை பிரகடப்படுத்த மலேசியா தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800க்கும் மேலாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் மாமன்னரின் சந்திப்புக்கு பின்னர் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கவுள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்துள்ள அமைச்சர் ஒருவர், ‘அறிவிப்புக்கு காத்திருங்கள்’ என கூறியதாக அத்தகவல்கள் கூறுகின்றன.


No comments:

Post a Comment