Sunday 23 August 2020

GE 15- டத்தோஸ்ரீ தனேந்திரன் வேட்பாளராக களமிறங்குவார் - டத்தோஸ்ரீ ஸாயிட்

 ரா.தங்கமணி

தஞ்சோங் மாலிம்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வேட்பாளராக களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம். ஆனால் அது எப்போது என்பது தெரியவில்லை. இந்த சூழலில் தேமுவின் தோழமை கட்சியாக உள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அதன் தலைவர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

இது இக்கட்சி தேமுவுக்கு வழங்கி வரும் விசுவாசத்திற்கு காட்டப்படும் நடவடிக்கையாகும்.

சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவுக்கு உரிய அங்கீகாரமாக இது அமைந்திருக்கும்.

இந்த இடைத்தேர்தலில் தேமு வெற்றி பெறுவதற்கு மஇகா,ம.ம.ச.கட்சி, ஐபிஎப் போன்ற கட்சிகள் களப்பணி ஆற்றி வரும் நிலையில் இந்தியர்களின் ஆதரவு மீண்டும் தேமுவுக்கு திரும்ப வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலிம் இடைத்தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது டத்தோஸ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment