Monday 3 August 2020

தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவர் நானா? டத்தோ அம்பிகா மறுப்பு

கோலாலம்பூர்-
தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவராக தாம் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் வதந்தி என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா தெரிவித்தார்.
இத்தகைய கூற்றில் உண்மையில்லை என்றார் அவர்.

எஸ்பிஆர்-இன் புதிய தலைவராக டத்தோ அம்பிகா பதவியேற்கவுள்ளதாக பெர்காசா அமைப்பின் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எஸ்பிஆர்-இன் தலைவராக பதவி வகித்த டத்தோ அஸிஸான் அஸார் ஹருண் அப்பதவியிலிருந்து விலகி ஜூலை 13ஆம் தேதி மக்களவை சபாநாகராக பதவியேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment