Thursday 6 August 2020

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கைது

கோலாலம்பூர்-
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்ததில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) இன்று கைது செய்யப்பட்டார்.

இன்றிரவு 9.10 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்த லிம் குவான் எங் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

வெ.6.3 பில்லியன் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கம் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி அண்மைய காலமாக விசாரணையை முடுக்கி விட்டிருந்தது.

எம்ஏசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பினாங்கு முன்னாள் முதல்வருமான லிம், நாளை (ஆக.7) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment