Thursday 16 April 2020

கோவிட் -19: பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதன்முறையாக சரிந்தது

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக மலேசியாவில் அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக அவ்வெண்ணிக்கை குறைந்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்து வந்தது. நேற்று மட்டும் 189 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவ்வெண்னிக்கை 85ஆக குறைந்துள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்நோயால் பாதிக்கபப்பட்டிருந்தவர்கள் 85ஆக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்நோய் தொற்றால் ஒருவர் மரணமுற்றார் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரை இந்நோயால் 5,072 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 83 பேர் மரணமடைந்துள்ளனர். 2,647 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment